இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: இந்திய அணி அபார வெற்றி

நாட்டிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5  ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 53 ரன்கள், பெண் ஸ்டோக்ஸ் 50 ரன்கள் எடுத்தனர். பின்னர் 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 40.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

தொடக்க ஆட்டக்காரர்களான தவான் மற்றும் ரோகித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் 137 ரன்கள், கோலி 75 ரன்கள், தவான் 40 ரன்கள் எடுத்தனர்.

Leave a comment

Your email address will not be published.