கணவரின் சொத்தா மனைவி?- உச்ச நீதிமன்றம் கேள்வி

திருமண பந்தத்தில் மனைவி என்பவர் கணவரின் தனிப்பட்ட சொத்தா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இத்தாலியில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த ஜோசப் ஷைன் உச்ச நீதிமன்றத்தில் கடந்த டிசம்பரில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “இந்திய தண்டனை சட்டத்தின் 497-வது பிரிவு அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இந்த சட்டத்தின்படி, தவறான உறவின்போது ஆண்கள் மட்டுமே குற்றவாளிகளாக கருதப்படுகின்றனர். பெண்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவது இல்லை. ஆண்களுக்கு எதிரான இந்த சட்டப்பிரிவை நீக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ரோஹின்டன் நாரிமன், கான்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியதாவது:

இந்திய தண்டனை சட்டம் 497-வது பிரிவு பெண்களுக்கு சாதகமானது போன்று தெரியும். ஆனால் இந்த சட்டம் பெண் களுக்கு எதிரானது. கணவரின் ஒப்புதலுடன் மனைவி தவறான உறவில் ஈடுபட்டால் அது தவறில்லை. கணவரின் ஒப்புதல் இல்லாமல் மற்றொரு ஆணுடன் உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் கூறுகிறது.

திருமண பந்தத்தில் மனைவி, கணவரின் தனிப்பட்ட சொத்தா கவே பாவிக்கப்படுகிறார். இது எந்த வகையில் நியாயம்? இவ் வாறு தலைமை நீதிபதி கூறினார்.

இதே வழக்கு கடந்த டிசம்பரில் விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றம் இதே கருத்தை வெளியிட்டது. திருமணமான பெண் கணவரின் சொத்தா, ஜடப்பொருளா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்த வழக்கில் கடந்த ஜூலை யில் மத்திய அரசு 11 பக்கங்கள் அடங்கிய பதிலை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், “திருமண பந்தத்தின் புனிதத் தன்மையை பாதுகாக்க தவறான உறவை குற்றமானதாகவே கருத வேண்டும். 497-வது சட்டப்பிரிவை ரத்து செய்யக்கூடாது” என்று கோரப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.