கனமழை காரணமாக காஷ்மீரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
காஷ்மீரில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. மழை இடைவிடாது நீடித்து வருகிறது. வானிலையும் மோசமாக உள்ளதால்,காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் கனமழை காரணமாக பிரதான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ராஜோரியில் உள்ள தர்ஹாலி ஆற்றில், வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து, ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர்.