பிலிக்குண்டுலு: கபினி அணையில் இருந்து 2-வது நாளாக 35,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.கார்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்நது பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலத்திற்கும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கபினி அணை கடந்த 3 நாட்களுக்கு முன்பாகவே முழு கொள்ளளவை எட்டியது.
கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொண்ட கபினி அணைக்கு நீர் வரத்தானது 33 ஆயிரம் கனஅடியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக கபினி அணையில் இருந்து 35,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே போல் 124.8 உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணை தற்போது 98.20 நீர் இருப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கே.ஆர்.எஸ். அணை தனது 4 அடி கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு 31,000 கனஅடி நீர் கொண்டிருக்கிறது. 500 கனஅடி மட்டும் கால்வாய் மூலமாக குடிநீருக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.