ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் உட்பட 4 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகப்வரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
அப்போது, அங்குள்ள பகுதி ஒன்றில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினரும்  பதில் தாக்குதல் நடத்தினர்.  இரு தரப்புக்கும் இடையே நீடித்த இந்த துப்பாக்கிச்சண்டையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  மேலும், பொதுமக்களில் ஒருவரும், ஒரு போலீஸ்காரரும் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. 3 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
 இன்னும், ஒன்றிரண்டு பயங்கரவாதிகள் பதுங்கியிருக்க கூடும் என்று நம்பப்படுவதால், தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.