பள்ளி மாணவியை அவரது உறவினர்களும், ஆசிரியரும் கடந்த 2 ஆண்டுகளாக கற்பழித்து உள்ளனர். 

உத்தர பிரதேச மாநிலம் சிதாபூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவியை அவரது உறவினர்களும், ஆசிரியரும் கடந்த 2 ஆண்டுகளாக கற்பழித்து உள்ளனர்.  ஆசிரியருடன் கூட்டு சேர்ந்து அந்த மாணவியை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். அந்த மாணவியை வீடியோ எடுத்து மிரட்டி இந்த படுபாதக செயல்களை செய்து வந்தனர். பாதிக்கப்பட்ட அந்த மாணவி இது குறித்து போலீசிடம் முறையிட்டபோது அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  மாணவி பற்றிய வீடியோ வெளியானதால் போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர். போலீஸ் விசாரணையில் மாணவியுடன் அந்த பள்ளியில் படிக்கும் உறவினரான சீனியர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் கும்பலாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

@ ஆண்டவா!