மகாராஷ்ட்டிர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழைக்கு இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். முக்கிய நகரங்கள் வெள்ள நீரில் மிதக்கிறது. ரயில், விமானம், பஸ் போக்குவரத்து ஸ்தம்பித்து போயுள்ளது. கனமழை காரணமாக மும்பையில் இன்று ( ஜூலை 2-ம் தேதி) பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்ளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இன்னும் மழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மும்பையின் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக மும்பையில் சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்கள் அனைத்தும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
@ மகா.,மழைக்கு பலி- 40 இன்னும் மழை பெய்யுமாம்
மகாராஷ்ட்டிர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழைக்கு இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர்.
