மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 137 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு 559.87 புள்ளிகளாக உயர்ந்துள்ளதையடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 137.10 புள்ளிகள் சரிந்து 35,325.98 புள்ளிகளாக உள்ளது. மின்சாரம், ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் எரிவாயு, வங்கி, பொதுத்துறை நிறுவனம், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற நிறுவன பங்குகள் விலை 0.93% வரை குறைந்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50.65 புள்ளிகள் குறைந்து 10,717.70 புள்ளிகளாக உள்ளது.
பவர் கிரிட், ஐசிஐசிஐ வங்கி, இன்டஸ் இன்ட் வங்கி, யெஸ் பேங்க், ஆர்ஐஎல், ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, எச்டிஎப்சி லிமிடெட், ஏஷியன் பெயின்ட்ஸ், எம் & எம், ஹீரோ மோட்டோ கார்ப்பரேஷன், பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ, என்டிபிசி, விப்ரோ மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற நிறுவன பங்குகள் விலை 2.05% வரை குறைந்து காணப்பட்டது.
ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 1.29%, ஹாங்காங்கின் ஹாங் செங் 1.30% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.20% சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழிற்துறை சராசரியாக 0.38% வரை அதிகரித்து முடிந்தது.