`விரைவில் தமிழகத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா’ – மத்திய அமைச்சர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் விரைவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அல்போன்ஸ்

இந்தியாவின் முக்கிய மலைவாச சுற்றுலா தளங்களான இமாசலபிரதேசம், சிக்கிம், டையு மற்றும் டாமன், அந்தமான் மற்றும் நிகோபார் மற்றும் அசாம் மாநிலங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை நடத்தப்பட்டு வருகிறது. `பவான் ஹன்ஸ் லிமிடெட்’ என்ற பெயரில் மத்திய சுற்றுலாத்துறை இச்சேவையை நடத்தி வருகிறது. சுற்றுலா பயணிகளிடம் இது பெரும் வரவேற்பை பெற மற்றப் பகுதிகளுக்கும் இதனை விரிவுபடுத்த மத்திய அரசு ஆலோசித்து வந்தது. இதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தமிழகத்திலும் இதற்கான ஆய்வுகள் நடந்தன.

Leave a comment

Your email address will not be published.