@ 3 பேர் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லாமல் பயணம்!…. உயிரிழப்பு # கொடுமையப்பா!🌐

கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லபாடி கிராமத்தை சேர்ந்தவர் சோமேஷ்வரன். இவர் இரண்டு நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் பர்கூர் அடுத்த தபால்மேடு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சோமேஷ்வரன் வேகமாக சென்றுள்ளார். அந்த நேரத்தில் எதிர்திசையில் கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூரை நோக்கி வந்த அரசு பேருந்தின் மீது நேருக்கு நேராக இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் பயணித்த சோமேஷ்வரனும், அவரது இரண்டு நண்பர்களும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.