உலகத்திலேயே ஏழு நாடுகளில்தான் இந்த பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது. 2005-ம் ஆண்டு முதல் அமெரிக்கா இந்த பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி வருகிறது. அதைத் தவிர்த்து நார்வே, பின்லாந்து, ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் இருக்கிறது.

தேசிய தலைநகரான புதுடெல்லியைப் பாதுகாக்க புதியதாக ஏவுகணை கவசத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது இந்தியா. பாதுகாப்புத் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் கீழ் இயங்கும் பாதுகாப்பு கையகப்படுத்துதல் சபை (Defence acquisitions council (DAC)) தேசிய மேம்பட்ட வான் ஏவுணைக்கான மேற்பரப்பு அமைப்பு-II (National Advanced Surface to Air Missile System-II (NASAMS-II)யினை கையகப்படுத்துவதற்கான ஒப்புதல் அளித்துவிட்டது. இதன்மூலம் வான்வெளி எல்லைக்குள் நுழைபவற்றை அடையாளம் காணவும், அதை உடனடியாக அழிக்கவும் செய்யலாம். மேலும், எதிரிகளின் ஏவுகணைகள், கண்காணிப்பு விமானங்கள் மற்றும் கப்பல் ஏவுகணைளையும் எளிதில் அழிக்க முடியும். உலகத்திலேயே ஏழு நாடுகளில்தான் இந்தப் பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது. 2005-ம் ஆண்டு முதல் அமெரிக்கா இந்தப் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி வருகிறது. அதைத் தவிர்த்து நார்வே, பின்லாந்து, ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் இருக்கிறது. அமெரிக்காவிடம் இருந்து இதைப் பெறுவதற்கு 1 பில்லியன் டாலர் ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி நகரத்துக்கு மட்டும்தான் இந்தப் பாதுகாப்பு அமைப்பு வாங்கப்படவிருக்கிறது. நாடு முழுமைக்கும் இல்லை. இதில் இன்னொரு விஷயம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (Defence Research and Development Organisation (DRDO) இரண்டு அடுக்கிலான வெகுதொலைவுக்குப் பாயும் ஏவுகணை கவசத்தை (Ballistic Missile Defence (BMD) உருவாக்கியுள்ளது. இவை வளிமண்டலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இலக்குகளைத் தாக்கி அழிக்கக்கூடியது. இரண்டுமே 2006 முதல் இதுவரை 13 முறை சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் ஏற்கப்படவில்லை. இதன்மூலம் வாஷிங்டன் போன்று டெல்லியும் வான் பாதுகாப்பில் யாராலும் தாக்க முடியாத இடமாக இருக்கும் என நம்புகின்றனர். மேலும், இரட்டைகோபுர தாக்குதல் போன்ற அசம்பாவிதங்களை எளிதில் முறியடிக்கலாம் எனக் கருதுகின்றனர்.