கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி நாத் உத்தரவிட்டுள்ளார்.

💥குமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி நாத் உத்தரவிட்டுள்ளார். குளச்சல் ஏ.எஸ்.பி. கார்த்திக் மேற்பார்வையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் நேற்று குளச்சல் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது 17 வயதிற்குட்பட்ட 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பைக் ஓட்டி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, சிறுவர்களின் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பெற்றோர்கள் – சிறுவர்களுக்கும் விபத்து குறித்து போலீசார் அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் பைக்குகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன.
கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டிய பைக் ஓட்டம்!🌐