இளைமை தோற்றத்தை தரும்!
முருங்கை எண்ணெய்யும் முருங்கை இலை பொடியும் முகத்தில் பூசி வந்தால் சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும். முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் மறையும். சருமத்தை இறுக்கமடையச் செய்து இளமையான தோற்றத்தை அளிக்கும்.
2. உதடுகளை மிருதுவாக்கும்!
உதடு பராமரிப்பு பொருட்களில் முருங்கை எண்ணெய்யை சேர்க்கத் தொடங்கியுள்ளனர். முருங்கை எண்ணெய் உதடுகளின் ஈரப்பதத்தைத் தக்க வைத்து மிருதுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
3. நிறத்தைக் கூட்டும்!
முருங்கை இலைகளை அரைத்து முகத்தில் பூசி வர, சருமத்தின் நிறம் கூடும்.
4. முகப்பருவைப் போக்கும்!
முருங்கையில் இருக்கும் ஆன்டிபாக்டீரியல் தன்மை, முகப்பரு வராமல் தடுக்கும். முருங்கை இலை சாற்றை முகப்பரு மீது தடவி வர, பருக்கள் காணாமல் போகும்.
5. உடலின் நச்சுக்களை வெளியேற்றும்!
முகப்பருக்கள் வர ரத்தத்தில் சேரும் நச்சுக்களும் ஒரு காரணம். முருங்கைப் பொடி அல்லது முருங்கை விதைகளை உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் வெளியேறும்.
6. சரும துளைகள் மறையும்!
0COMMENTSமுருங்கையில் சரும ஆரோக்கியம் தரும் கொலாஜன் புரதம் இருப்பதால் முகத்தில் இருக்கும் துளைகளை மறையச் செய்யும்.
அற்புதம் செய்யும் முருங்கை ஃபேஸ் மாஸ்க்!
முருங்கை இலைகளை வெயிலில் உலர்த்தி பொடியாக்கிக் கொள்ளவும். இந்தப் பொடியுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ரோஸ் வாட்டர், அரை டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு உள்ளிட்டவற்றைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் குழைத்து காலை வேளையில் முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவவும். பின்னர் சுத்தமான துணியால் முகத்தை துடைத்துக் கொண்டு சிறிதளவு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்துவர முகத்தில் பொலிவு கூடும்!