தமிழக வனத் துறையால் உருவாக்கப்பட்டுள்ள ‘தமிழ்நாடு சூழல் சுற்றுலாக்கொள்கை 2017’ புத்தகத்தை முதல்வர் கே.பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி விதி 110-ன் கீழ் பேசிய முதல்வர் கே.பழனிசாமி, ‘‘தமிழகத்தின் வன வளத்தை பாதுகாக்கவும், வன உணர்வை அனைவரிடமும் வளர்க்கவும் ‘தமிழ்நாடு சூழல்சார் சுற்றுலா கொள்கை 2017’ உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, தமிழக வனத் துறை சார்பில், ‘தமிழ்நாடு சூழல் சுற்றுலா கொள்கை’ உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சூழல் சுற்றுலா கொள்கை புத்தகத்தை முதல்வர் கே.பழனிசாமி நேற்று வெளியிட்டார். வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.