விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி45 ராக்கெட்

‘எமிசாட்’ மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி45 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயன்பாட்டுக்கு இந்த செயற்கைக்கோள் பயன்படும், மினி செயற்கைக்கோள் ‘எமிசாட்’. இது பி.எஸ்.எல்.வி-‌சி45 மூலம் விண்ணில் செலுத்தப்பட முடிவு செய்யப்பட்டது.

இன்று காலை 9.30 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

இதில், அமெரிக்காவின் 24 செயற்கைக்கோள்கள், சுவிட்சர்லாந்து, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் ‌இருந்து தலா ஒரு செயற்கைக்கோள் மற்றும் லுதுவேனியாவை சேர்ந்த 2 செயற்கைக்கோள்கள் என 4 நாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்கள் வணிக ரீதியாக விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இஸ்ரோ மூலம் முதல்முறையாக ஒரே ராக்கெட்டில் 3 செயற்கைக்கோள்கள் வெவ்வேறு புவி சுற்றுவட்டப்பாதைகளில் நிலைநிறுத்த உள்ளது. ‌ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பப்பட்ட 71வது ராக்கெட் இதுவாகும்.

|